logo

முன்னாள் படை வீரர்கள் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

02/Nov/2020 08:34:42

ஈரோடு:முன்னாள் படை வீரர்கள் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு:முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்று கல்வி அறிவினை மேம்படுத்திடவும், கல்வி உதவித்தொகைப் பெற்றிடும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திடவும்  2019-2020-ஆம் கல்வி ஆண்டு முதல் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை பெற்றிட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

 இதுவரை கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திடாத முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்கள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான்பவன் 3-ஆம் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்தால், அதன் விவரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.


Top