logo
புதுக்கோட்டைஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவ விழா

புதுக்கோட்டைஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவ விழா

28/Jan/2021 04:59:33

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை  மேலராஜ வீதிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  முதலாம் ஆண்டு தைப்பூச பிரமோற்சவ விழா11  நாட்கள் விமரிசையாக   நடைபெற்றது.

 தைப்பூச பிரமோற்சவ விழா  நடைபெற்ற 11 நாட்களில்  தினமும்  தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட  புனித பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

மாலையில்,  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர்  மலர்  அலங்காரத்தில் ,   சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் உற்சவர் தண்டாயுதபாணி மங்கள வாத்தியத்துடன் ஆலயத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

 நிறைவு நாளில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில்  இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்  நடத்தப்பட்டது. இதையடுத்து   திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில்  இருந்து ரத ஊர்வலம்  நடந்தது.

நிகழ்வில், டாக்டர் ராம்தாஸ்,  செந்தில் ,கவிஞர் தங்கம்மூர்த்தி  எஸ். வி.எஸ்.ஜெயக்குமார், ஏவிசிசி. கணேசன், வழக்குரைஞர் செந்தில்குமார், சுகுமாரன், ஐயப்பன் ,மணிகண்டன் எஸ்எஸ்ஆர்.  காய்கரி கமிஷன் மார்க்கெட், அகமுடையார் உறவின்முறையினர் ,  காமாட்சி டிரான்ஸ்போர்ட்  உள்ளிட்ட உபயதாரர்கள்  மற்றும்  திரளான  பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவஸ்ரீ பாலா ஸ்ரீ குருக்கள், செல்லப்பாகுருக்கள்  மற்றும் உதவி ஆணையர் சுரேஷ்,  திருக்கோயில் நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி ,பாரதிராஜா   ஊழியர்கள் செய்திருந்தனர்.

Top