21/Oct/2020 06:12:24
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில், சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் இன்று இணைந்தனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.பி. அக்ரஹாரம் பகுதி 14-வார்டை சேர்ந்த ஆயில் மில் வாசுதேவன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அனைவரையும் எம்எல்ஏக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, பெரியார் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதைய்யன்,நிர்வாகிகள் காவிரி செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.