logo
கோபிசெட்டிப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோபிசெட்டிப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

21/May/2021 07:17:33

ஈரோடு, மே: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் மின் வேலியில் சிக்கி 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் யானை,மான்,சிறுத்தை,பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு கரும்பு, சோளம், வாழை, நெல், குச்சி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்

இந்த வன விலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால் தோட்டத்தை சுற்றி விவசாயிகள் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர், இந்த நிலையில் நேற்று இரவு கொங்கர்பாளையத்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று புகுந்துள்ளது, அப்போது அங்கு போடப்பட்ட மின் மின் வேலியில் சிக்கி அந்த ஆண் யானை உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் உயிரிழந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்ய சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் வரவழைக் கப்பட்டிருந்தார்.

மேலும் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தோட்டத்தை யானைகள் சேதப்ப டுத்தக் கூடாது என்பதற்காக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் உயர் மின்னழுத்தம் செலுத்தப்பட்டது தெரிய வந்ததது. 

வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழி மழையினால் சேதமடைந்து மூடிவிட்டதால் காட் டு விலங்குகள் எளிதாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதாகவும் அதனை சரி செய்ய வனதுறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Top