logo
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அதிமுகவினர்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அதிமுகவினர்

07/Oct/2020 11:58:33

ஈரோடு: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக  எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

 ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா  அருகே  திரண்ட  அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சையை வெளிப்படுத்தினர்.இதில், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியர்நகர் மனோகரன்,கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், ராமசாமி தங்கமுத்து, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால் மாணவரணி  பொருளாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில்... 

 அடுத்த சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக  எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானதையடுத்து புதுக்கோட்டை நகரில் எம்ஜிஆர் சிலை அருகே திரண்ட அதிமுக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட் என்ற அப்துல்ரகுமான், நகர கூட்டுறவு வங்கி தலைவர் மாரிமுத்து மாவட்ட கவுன்சிலர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top