logo
ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

20/Dec/2020 11:03:33

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு, நந்தா கல்வி நிறுவனங்கள், கே.எம்.கே.குழுமம் ஆகியன சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். கே.கே.கார்த்தி முன்னிலை வகித்தார்.

நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகம், கே.எம்.கே. குழுமத்தின் தலைவர் கே.எம்.கண்ணன், வீரப்பன்சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர்  ஜெயமுருகன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சத்திரோடு, சுவஸ்திக் கார்னர் வழியாக வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஊர்வலத்தில் கூட்டமைப்பு பொருளாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


Top