logo
கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமான பெண்சிசு மீட்பு

கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமான பெண்சிசு மீட்பு

23/Jul/2021 10:57:42

புதுக்கோட்டை, ஜூலை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண்சிசுவை வெள்ளிக்கிழமை இரவு வருவாய்த்துறையினர் மீட்டனர்.

கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையில் குழந்தையின் அழுகுறல் கேட்டுள்ளது.  அவ்வழியாகச் சென்றவர்கள் அருகில்  சென்றுபார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தையை யாரோ விட்டுச்சென்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின்பேரில்  சம்பவ இடத்துக்குச்சென்ற கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், அந்த பெண்சிசுவை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் குழந்தையை ஓப்படைத்தனர். 

குழந்தையை விட்டுச்சென்றது யார்  என்பது தொடர்பாக  கறம்பக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Top