logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

23/Jul/2021 10:04:32

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் இரவு நேர காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கீழ்க்காணும் 15 கோவில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்களை முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட  வேண்டியுள்ளதால்  62 வயதிற்கு  உட்பட்டவர்களாகவும்,  திடகாத்திரமுள்ளவராகவும்  உள்ள  முன்னாள்  படைவீரர்களுக்கு  மாத ஊதியம் ரூ.7,300 வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பித்து  பயனடையலாம்.

மீனாட்சி சொக்கலிங்கஸ்வரர் திருக்கோயில், மேலச்சிவபுரி, பொன்னமராவதி, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், அகஸ்தீவரர் திருக்கோயில், எட்டியத்தளி, அறந்தாங்கி, மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, திருமயம்,    விஸ்வநாதசுவாமி திருக்கோயில், அகவயல், கே.புதுப்பட்டி,                        சுப்ரமணியசுவாமி திருக்கோயில், விராலிமலை, விஜயபட்டாபிராமர் திருக்கோயில், சிங்கவனம், மணமேல்குடி, சித்தக்கூர் சேவுகபெருமாள் திருக்கோயில், கரூர், கண்ணம்மாள்நிலவளமுடைய அய்யனார் திருக்கோயில், கரூர், மீனாட்சி சுந்தஸ்வரர் திருக்கோயில், குழிபிறை, பனையப்பட்டி. 

மேலும் முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், பொன்னமராவதி,            சொக்கலிங்கர் மீனாட்சி திருக்கோயில், குருவிக்கொண்டான்பட்டி, பனையப்பட்டி, அடைக்கலம்காத்தம்மன் திருக்கோயில், விராச்சிலை, பனையப்பட்டி, திருவருள் காளீஸ்வரர் திருக்கோயில், திருமயம், பனையப்பட்டி, அருள்மிகு பர்வதீஸ்வரர் திருக்கோயில், குன்னாண்டார்கோயில், உடையாளிப்பட்டி காவல் நிலையம் ஆகிய கோயில்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

Top