logo
புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோன தடுப்பூசி முகாம்.

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோன தடுப்பூசி முகாம்.

29/Jun/2021 05:33:21

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா தலைமையில், மாவட்ட சுகாதாரப் பிரிவு டாக்டர்கள், செவிலியர்கள் திருநங்கைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர்.  ஏற்கெனவே 15 திருநங்கைகளுக்கு திங்கள்கிழமை  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள  நிலையில், செவ்வாய்க்கிழமை கூடுதலாக 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருநங்கைகள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு கொரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் பதிவு செய்யாதவர்களையும் உடனுக்குடன் பதிவு செய்யவும் சமூக நலத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, மாவட்டத் திலுள்ள 86 திருநங்கைகளில், 40 பேர் ஏற்கெனவே நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், 22 பேருக்கு படிவம் வழங்கப்பட்டு முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளைபுதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவர் ரெ. ஷிவானி  செய்திருந்தார்.

Top