logo
கடலில் தவறி விழுந்து காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரின் சடலம் மீட்பு

கடலில் தவறி விழுந்து காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரின் சடலம் மீட்பு

28/Jun/2021 10:34:48

புதுக்கோட்டை, ஜூன்: கடலில் விழுந்து கடந்த 2 நாள்களுக்கு முன் காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவரின் சடலம்  கடலோர காவல்படையினரால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் சரகம், கொடிக்குளம் கிராமம்வடக்கு புதுக்குடியைச்சேர்ந்த  மீனவர் தினமணி மகன் வசீகரன்(19)  என்பவர் 26.06.2021 அன்று  காலையில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுவிட்டு  பிற்பகல்  2.15 மணியளவில்சுமார் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் கரைக்குத் திரும்பிவரும்போது படகிலிருந்து கடலில் தவறிவிழுந்து காணாமல் போய்விட்டார்

கடலோரக்காவல்படையினர் மற்றும் மீனவர்கள் அவரைக் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில்  அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு திங்கள்கிழமை ( 28.06.2021) காலை  சுமார் 11 மணியளவில் புதுக்குடி மீன்பிடிதளத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளது

இதையடுத்து  மீனவரின் சடலத்தை  உடற்கூராய்வு செய்யப்படுமமெனவும், ஆம்புலென்ஸ் மற்றும் காவல்துறை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக  மணமேல்குடி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Top