logo
குடிநீர் குழாயில் உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்து  ஓடி  வீணாகிய குடிநீர்

குடிநீர் குழாயில் உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிய குடிநீர்

01/Jan/2021 10:46:07

ஈரோடு, டிச: ஈரோடு பெரியார் நகர் ஆந்திரா வங்கி சாலையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக குழிகள் தோண்டியபோது அங்கு ஏற்கனவே சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

 இந்தநிலையில், அந்த பகுதியில் குடிநீர் வினியோகம்  நடந்தபோது  குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து வீணாக ஓடியது. ஏற்கெனவே வியாழக் கிழமை இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததாலும், குடிநீர் வீணாக சென்ற தாலும் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது.

 மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும்  அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Top