logo
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

26/Jun/2021 06:40:57

புதுக்கோட்டை, ஜூன்:  ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் .ராமையன், எஸ்.சி.சோமையா, எம்.ராஜாங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு, மதிமுக கண்ணன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.பீமராஜ், எஸ்.சுந்தர்ராஜன், எம்.ஜியாவுதீன், ஆர்.சி.ரெங்கசாமி, .அரசப்பன், துரை.நாராயணன், டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர். விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார்.

ஓன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும். அத்தியாவசிப் பெருட்கள் விலையேற்றத்துக்குக் காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

 

Top