logo
கோவில்களை திறக்க வலியுறுத்தி ஈரோட்டில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்களை திறக்க வலியுறுத்தி ஈரோட்டில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

25/Jun/2021 05:32:43

ஈரோடு, ஜூன்: கோவில்களை திறக்க வலியுறுத்தி ஈரோட்டில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தாக்கம் காரணமாக கோவில்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . எனினும் இந்து ஆகம விதிப்படி அந்தந்த கோயில்களில் பூசாரிகள் கால பூஜைகள் மட்டும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி யினர்  வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  கோவில்களை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இன்று திண்டல் வேலாயுதசாமி கோவில் முன்பு  மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முரளி தலைமையில் கோவிலை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திண்டல் நகர தலைவர் தமிழ்செல்வன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல்  வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில்,வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில், வெட்டுக்காட்டு வலசு மாரியம்மன் கோவில் மற்றும் மாதம் முழுவதும் பல்வேறு கோவில்கள் முன்பாக இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top