logo
உணர்வுகள் அமைப்பின் சார்பில் எச்ஐவி பாதித்த 134  குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை,இனிப்பு வழங்கல்.

உணர்வுகள் அமைப்பின் சார்பில் எச்ஐவி பாதித்த 134 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை,இனிப்பு வழங்கல்.

10/Nov/2020 07:25:39

ஈரோடு: ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காலகட்டங்களில் பல்வேறு உதவிகளை பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக உடுக்கை (ஏழைகளுக்கு  துணிகள் வழங்குதல்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலமாக, உணர்வுகளின் நிறுவனத் தலைவர் டாக்டர்.மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்  இன்று(10.11.2020)  நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு  பங்கேற்று,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள  எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மற்றும் எச்ஐவி நோயால் இறந்த பெற்றோர்களின் ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ள 134 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் கலந்துகொண்டு  குழந்தைகளுக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை மருத்துவர்களிடம் வழங்கினார்.

 உணர்வுகளின் தலைவர் மக்கள் ராஜன் பேசுகையில். இனிவரும் காலங்களில் இக்குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் படிப்பதற்கு உணர்வுகள, அமைப்பின் சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்து படிக்க வைக்க உதவி செய்யும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவி செய்த ஈரோடு அப்துல் கனி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகளுக்கும், டாக்டர்.அப்துல் சமது அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

 இந்நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ (பொறுப்பு) டாக்டர் ரவிச்சந்திரன், ஏ ஆர் டி அலுவலகம் அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு, டாக்டர் பரீத், டாக்டர் செந்தில், ஏ ஆர் டி மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா தேவி, ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்வொர்க் நிறுவனர் தங்கமணி, செவிலியர் கண்காணிப்பாளர் சரஸ்வதி, மூத்த செவிலியர்  சகிலா, செவிலியர் ஜெயந்தி ,உணர்வுகளின் நிர்வாகிகள் மேகலா, பிரபு, புவனேஷ், சவுஜன்ய,  கவிதா, நவீன், கார்த்தி, ஸ்னேகா, ஆரிப் அலி, சர்வேஸ்வரன், ஸ்மிதா, செல்வா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Top