logo
ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.87 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.87 லட்சம் அபராதம்

24/Jun/2021 06:21:10

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து ரூ.1.87 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்ப டுத்த வரும் ஜூன் 28 -ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட் டு ள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி- சசிமோகன் அறிவித்திருந்தார்.

30-ஆவது நாளான புதன்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 264பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப் பட்டது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 267 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 232 இருசக்கரவாகனங்களும், 11 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அபராதம் மட்டும் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம்  விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை  போலீசார் நிறுத்தி விசாரிக்கும்போது பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்வ தாக  கூறி விட்டு சென்றனர்.

Top