logo
ஈரோட்டில் 256 வாகனங்கள் பறிமுதல் செய்து 275 பேர் மீது  போலீஸார் வழக்குபதிவு

ஈரோட்டில் 256 வாகனங்கள் பறிமுதல் செய்து 275 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு

23/Jun/2021 06:07:06

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக  256 வாகனங்கள் பறிமுதல் செய்து 275 பேர் மீது  போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ஆம்  தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங் கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  எஸ்.பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

29-ஆவது நாளான  புதன்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 311 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 247 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 247 இருசக்கரவாகனங்களும், 9 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் ஒரு  நாள் மட்டும் ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சோதனை சாவடிகளில் -பதிவு இன்றி வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வர வலியுறுத்தினர்.

Top