22/Jun/2021 10:50:30
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கவிதாராமு அவர்களை தமிழ்நாடு போரூராட்சி பணியாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்துத்தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மு.செ. கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநில துணை தலைவர் அ.கனகமுத்து, மாவட்டதலைவர் சி.கேசவன், மாவட்ட செயலாளர் க.குமார், மாவட்ட இணைசெயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரச்சார செயலாளர் பாபு மற்றும் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு புத்தகம் அளித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.