logo
மொடக்குறிச்சி தொகுதியில் கருவூல அலுவலகம் திறக்க நடவடிக்கை:  மொடக்குறிச்சி தொகுதி  பாஜக எம்எல்ஏ பேச்சு

மொடக்குறிச்சி தொகுதியில் கருவூல அலுவலகம் திறக்க நடவடிக்கை: மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ பேச்சு

14/Jun/2021 07:55:40

ஈரோடு, ஜூன்:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில்  நிரந்தரமான கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ- சி.கே. சரஸ்வதி.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி  பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து முழு ஊரடங் கால் தினசரி வருவாயை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்புக்கள் வழங்கப் பட்டன. 

 பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ சரஸ்வதி கூறியதாவது: மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் கருவூல அலுவலகம் அமைப்பதற்கான  ஏற்பாடுகளையும்

நீதிமன்றம் அமைத்திடவும், தரம் உயர்த்தப்பட்ட மாநகர துணைக் கண்காணிப்பாளர் அலுவலதத்தை அமைப்பதற்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலூகா மருத்துவ மனைகளாக அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக தரம் உயர்த்திடவும், துணை சிறை  அமைத்திடவும் அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்படும் என்றார் எம்எல்ஏ- சரஸ்வதி. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மொடக்குறிச்சி யூனியன் தலைவர் கணபதி, வழக்குரைஞர்  பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top