logo
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவற்றோருக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்கல்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆதரவற்றோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்.

20/Jun/2021 07:35:13

புதுக்கோட்டை , ஜூன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில்   ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்  (20.6.2021) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டையில்  மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா கலந்துகொண்டு பயனாிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி , மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன்  மற்றும்  பொறுப்பாளர்கள் இராஜா  ,கீதா இளையராஜா, செந்தில்குமார், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் ஜீவன்ராஜ்  வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பேச்சியம்மாள்  நன்றி கூறினார்.

 

Top