logo
தடுப்பூசி தீர்ந்து போனதால் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

தடுப்பூசி தீர்ந்து போனதால் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

20/Jun/2021 03:20:29

ஈரோடு, ஜூன்:  தடுப்பூசி தீர்ந்து போனதால்  ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16 -ஆம் தேதி ஈரோடு புறநகர் மாவட்டத்திலும், 17-ஆம் தேதி ஈரோடு மாநகர் மாவட்ட பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டதுசனிக்கிழமை  மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் 10 மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சனிக்கிழமை  முன்தினம் இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் திரண்டு வந்து இடம் பிடித்தனர். பின்னர் டோக்கன் அடிப்படையில் 100 பேருக்கு ஒவ்வொரு மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி தீர்ந்து போனதால்  ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்திங்கள்கிழமை கூடுதலாக தடுப்பூசிகள் வந்தவுடன்  மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களில் தடுப்பு ஊசிகள் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவல் தெரியாதத மக்கள் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதால் மையங்களில் மட்டும் தடுப்பூசி போடாமல் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top