20/Jun/2021 11:13:01
சென்னை, ஜூன்: சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ- உதயநிதி ஸ்டாலின் தனது அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கையை எந்த நேரத்திலும் அளிக்கும் வசதியாக புகார் பெட்டியை வைத்தார்.
தொகுதி மக்கள் தங்கள் தேவைகளை - கோரிக்கைகளை எந்நேரமும் என்னிடம்
தெரிவிக்க ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்
புகார் பெட்டி ஒன்றை அமைத்துள்ளோம். இந்தப் பெட்டியில் பொதுமக்கள்
போடும் மனுக்களில் கூறப்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு
என்னால் இயன்ற முயற்சிகளை எடுப்பேன் என
உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.