19/Jun/2021 09:28:26
புதுக்கோட்டை, ஜூன்: ஆட்டோக்களுக்கு இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோவில் பயணிக்க இ- பாஸ் முறையை ரத்துசெய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ், இஎம்ஐ கட்டுவதற்கு டிசம்பர் 31 வரை கால நீட்டிப்புச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் சனிக்கிழமை புதுக்கோட்டை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சிஐடியு மாவட்ட தலைவர் கே.முகமதுஅலிஜின்னா,
மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ரத்தினவேல், வீரமுத்து
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.