logo
 உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரான மேக்கே தாட்டு அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரான மேக்கே தாட்டு அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

19/Jun/2021 09:35:09

சென்னை, ஜூன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேக்கே தாட்டு அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர்  எடியூரப்பா   ஒரு தலைப்பட்சமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது  உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவினைக் குறைத்திடும் என்றும் கூறி தமிழ்நாடு மிகக் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் அவர்களிடம் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை  28.3.2015- அன்று நேரடியாக வழங்கியும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇப்போது  பிரதமர்  நரேந்திர மோடி அவர்களை தில்லியில் நேரில் சந்தித்த போது மேக்கே தாட்டு அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறேன்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில், கர்நாடக. முதலமைச்சர்  எடியூரப்பா  தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்வித்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும் விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

ஆகவே, தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கும் எதிரான - மேக்கேதாட்டு  அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மேக்கேதாட்டு  அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி  வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் முதல்வர் மு..ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Top