18/Jun/2021 12:34:15
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுக-வில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான திரு. டி.ஆர். பாலு, அவர்கள் தான்.
ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் திரு. டி.ஆர். பாலு, இத்திட்டத்தை தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து 2010-ல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார்.
இதை திரு டிஆர். பாலு அவர்களே தன்னுடைய பேட்டி
ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கின்றன. திமுக தான் அதைக் கொண்டுவந்தது என்பதை அவர்களே ஒப்புதல்
வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
அதே போல, ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வுப் பணி துவங்க, நான்கு ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவளத்திற்கு 2011 ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது திமுக அரசு தான்.
அதுவும் தற்போதைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக இருந்தபோது, அவரது முன்னிலையில் தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று அப்போதைய திமுக அரசு கூறியது.
மேலும், தமிழ் நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை
எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச் சூழல் இசைவாணை முதன் முதலில் 2008-ல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில்
திமுக ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஏழு கிணறுகளுக்கு திமுக தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. 2011-இல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5 கிணறுகளுக்கு ஆட்சிக் காலத்தில்தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான நன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை ஜெயலலிதா அமைத்தார்கள்.
அத்தோடு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், காவேரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இது போன்ற திட்டங்களை ல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு, மாநில அரசிடம் ஆலோசனை நடத்த டும் என்றும் 8.10.2015 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்கள்.
மேலும், 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில்
டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளுக்கு மீத்தேன் எரிவாயுத்திட்டம்,
ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற, விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பிற்கு இணங்க கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஒரு போதும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு
தடையில்லாச் சான்று அளிக்கவில்லை என்று சட்டமன்றத்திலும்
சரி வெளியிலும் சரி. பல முறை நான் அழுத்தம் திருத்தமாக
கூறியுள்ளேன். அதனை
முழுமையாக கடைபிடித்து வந்தோம் என்பதையும் தமிழக
மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 9.2.2020 அன்று தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா நிகழ்ச்சியில் தமிழ்
நாட்டின் நெற்களஞ்சியமாம்
காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக்
கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டின் உணவுப்
பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும்,
காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற
அறிவிப்பை நான் வெளியிட்டேன்.
தொடர்ந்து 2020-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே , வேளாண்
பெருமக்களின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே
சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, தகுந்தவழிமுறைகளை
ஆராய்ந்து, இந்தச் சட்டத்தினை மிக நுணுக்கமாக தயாரித்து, பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனிச்
சட்டத்தினை சட்ட சபையில் அறிமுகம் செய்து அதனை நிறைவேற்றியதன் மூலம் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
மேலும், எங்களது ஆட்சியின் போது
புதிதாக நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டங்களில் ஆழ்துளைக்
கிணறு அமைப்பதற்காக திருவாளர்கள்ஓஎன்ஜிசி மற்றும் திருவாளர்கள் வேதாந்தா நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து குறிப்பு, விதிமுறைகளை பெற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு 9.8.2019 அன்று ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன் ஆய்வு அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. மேலும். இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வரை எந்தவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று நான் முதலமைச்சராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தேன்
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்
கிணறு அமைக்க சுற்றுச்சூழல் வறை அனுமதி பெறும் பொருட்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பு
தேவையில்லை 16.1.2020 அன்று திருத்தப்பட்ட அறிவிக்கையை
மத்திய அரசு வெளியிட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக்
கருத்தில் கொண்டும், காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கும் பொருட்டும். பொதுமக்களின்
கருத்துக் கேட்புக்குப் பின்னரே இதுபோன்ற திட்டங்கள்
பரிசீலிக்கப்பட வேண்டும்
என வலியுறுத்தி, மத்திய அரசின் திருத்தப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறவேண்டும்
என பாரதப் பிரதமருக்கு அப்போதே கடிதம்
எழுதினேன்.
இப்படிப்பட்ட நிலையில் 17.6.2021 -அன்று வெளிவந்த ஒரு செய்தியில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ
கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிய வருகிறது.
அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது
தமிழ் நாட்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ அல்லது
இதுபோன்ற இதர எண்ணெய் நிறுவனங்களோ, ஏதேனும்
புதிய
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி
அளிக்கவில்லையோ அதுபோல்.
தற்போதும்
அரியலூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரான
ஓ.என்.ஜி.சின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி
தமிழ் நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு அரசின் கடுமையான எதிர்ப்பை
தமிழக முதலமைச்சரும் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.