logo
ஈரோடு பேருந்து  நிலையத்தில்  இரண்டாவது நாளாக காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை

12/Jun/2021 08:30:08

ஈரோடு, ஜூன்: ஈரோடு பேருந்து  நிலையத்தில்  இரண்டாவது நாளாக காய்கறி வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் ஈரோடு . .சி.பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள்.50-க்கும் மேற்பட்ட பழ வகை கடைகள் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2 - ஆம் அலை தாக்கம் காரணமாக தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதை யடுத்து தடுப்பு நடவடிக்கையாக . .சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால்பொது மக்கள் பாதிக்காத   வகையில் ஈரோடு பேருந்து  நிலையத்தில் தற்போது காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது

 பொது மக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகள் உள்ளதால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி  இங்குள்ள   550 காய்கறி வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்காக அமைக்கப்பட்ட  4 மருத்துவ குழுக்கள் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக ஈரோடு பஸ் நிலையத்தில் 500 -க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை விடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

Top