logo
ஈரோடு கொங்கு  கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கோவிட  சித்தா சிகிச்சை பிரிவு தொடக்கம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கோவிட சித்தா சிகிச்சை பிரிவு தொடக்கம்

12/Jun/2021 07:45:18

ஈரோடு, ஜூன்: ஈரோடு கொங்கு  கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் 100 படுக்கை வசதிகளுடன் கோவி்ட்  சித்தா சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து அரசு மருத்துவ மனைகள், தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளில்  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர சிறப்பு  மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனாவால் மதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருந்து றையில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்கெனவே கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 250 படுக் கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதே கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசின் சித்தா மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சித்தா மருத்துவ பிரிவில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Top