logo
அறந்தாங்கி அருகே ரேசன் அரிசியை பதுக்கிய குடோனுக்கு அதிகாரிகள் சீல்.

அறந்தாங்கி அருகே ரேசன் அரிசியை பதுக்கிய குடோனுக்கு அதிகாரிகள் சீல்.

11/Jun/2021 06:26:02

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 65 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, குடோனுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயல் பகுதியில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் லூதர் மார்ட்டின் உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் 65 மூட்டைகளில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் குடோனுக்கும் சீல் வைத்தனர். மேலும், இதுதொடர்பாக சுயம்புலிங்கம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

Top