26/Dec/2020 09:05:09
ஈரோடு, டிச: முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில், மாவட்ட செயலர் மயில்துரையன், தொழில்சங்க செயலர் குமார், இணைச்செயலர் குணா, விவசாய அணிச்செயலர் முருகேஷ், மகளிரணி மாவட்டச் செயலாளர் சத்யா, நிர்வாகிகள் சோமு. சங்கரன், சிவபாண்டியன், கந்தசாமி, ரஞ்சித், ரமேஷ், சதீஷ், கோகுல்ராஜ், சந்திரன், கவியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்