logo
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி  தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது வழக்கு

11/Jun/2021 05:31:06

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை  மீறி  தேவையின்றி வெளியே சுற்றிய 575 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 18-ஆவது நாளான வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 227 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமும், ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 530 இருசக்கரவாகனங்களும், 21 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு நாளில் மட்டும் ரூ.3.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வரும் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலோனோர் மருத்துவ காரணங்களைக் கூறியதால  வேறு வழியின்றி போலீஸார் அவர்களை அனுமதித்தனர்.

Top