logo
கொரோனா நோய் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ- நிவாரண உதவி

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ- நிவாரண உதவி

10/Jun/2021 06:46:22

ஈரோடு, ஜூன்: கொரோனா நோய் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் .வெ.ரா அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்பினை வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் .வெ.ரா கலந்து கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்புப் பைகளை வழங்கினார்.

இதேபோல் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் திருமகன் .வெ.ரா வழங்கினார். கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை  சமூக இடைவெளியுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Top