29/May/2021 05:28:11
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தலைமையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார்
மருத்துவமனைகள் கொரோனா
விதிமுறைகளை பின்பற்றவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அந்தியூர் வட்டாட்சியர்
வீரலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அந்தியூர் பகுதியில்
செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு
நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
அப்பொழுது அந்தியூர் - பவானி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அளவுக்கதிகமாக நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுமதித்தது
சமூக இடைவெளி முக கவசம் போன்றகொரானா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்ற தகவலை மாவட்ட ஆட்சியரிடம் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்