logo
ஈரோட்டில்  மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா   உணவு பொருட்கள் வழங்கல்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உணவு பொருட்கள் வழங்கல்

10/Jun/2021 06:18:21

ஈரோடு, ஜூன்: ஊரடங்கால் ஈரோட்டில்  பாதிக்கப்பட்டுள்ள  மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு எம்.எல்.. திருமகன் ஈவெரா  அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் .மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.., திருமகன் ஈவெரா  கலந்து கொண்டு  ஊரடங்கால்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

பின்னர், வரகப்பா வீதியில்  கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும்  எம்.எல். திருமகன் ஈவெரா வழங்கினார்.

இதில், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி, தி.மு.., பகுதி செயலாளர் பொ.ராமசந்திரன், துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, பாபு, ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Top