logo
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

09/Jun/2021 07:00:05

ஈரோடு, ஜூன்:  ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில்  நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழச்சி ஈரோடு பெரியார் மன்றத்தில் சங்கத்தலைவர் ரமேஷ் முன்னிலையில்  சங்கத்தின் செயலாளர் ஜீவா தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் சசிமோகன் கலந்து ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில்  தலா 25 கிலோ அரிசி பை மற்றும் மசாலா பொருட்கள் மற்றும்  சில நல்ல உள்ளங்களில்  பங்களிப்பில் கிடைத்த  பருப்பு, புளி, கோதுமை என மொத்தம் 19 வகையான உணவு பொருட்களை  அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கினார்.

 

பின்னர் அவர் பேசுகையில், தவறுகளை சுட்டிக் காட்டவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு நல்லது நடப்பவைகளை பத்திரிகைகள் ஊக்குவிக்க வேண்டும்.தற்போது உள்ள நெருக்கடி கால கட்டத்தில் சக தோழர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் இது போன்ற சிறப்பான சேவைகள் பாராட்டுக்குரியது என்றார்.


முன்னதாக, சங்கத்தின் செயலர் ஜீவா தங்கவேல்  பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் பத்திரிகையாளர் சமூகத் திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அதற்காக உதவ பத்திரிகையாளர் நலச் சங்கம் எடுத்த முயற்சிகள்  பற்றியும் குறிப்பிட்டார்.

மேலும், சென்ற வருடம்  நேரிட்ட கொரோனா கால ஊரடங்கு நெருக்கடியின் போது பத்திரியாளர்களின் குடும்ப சூழலை அறிந்து  சக்தி மசாலா நிறுவனம் இதே போன்று மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா  25 கிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை  வழங்கியதையும், அதே போல  இந்த  வருடமும் சக்தி மசாலா நிறுவனத்தினர் உதவி பொருட்கள் வழங்கிதையும் நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

 சங்க பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன்  தனது நன்றியுரையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  பல்வேறு ஊர்களில்  பத்திரிகையாளர்கள் அமைப்புகள் பல உள்ளன. ஆனால் பத்திரிகையாளர்களின் சுக துக்கங்களில்  பங்கெடுத்து  இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் குடும்ப கஷ்டத்தை போக்கும் வகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் நேரடியாக பயன்பெறும் வகையில்  நிவராண உதவிகளை வழங்கி வரும் சக்தி மசாலா நிறுவனத்துக்கும் பிற அமைப்புகளுக்கும்  ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்க இருந்து 200 -க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.

இதில், சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி துணை செயலாளர்கள் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தி.. சண்முகம், பழனிச்சாமி, மகேந்திரன், விஜய் சாய்,பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உள்பட திரளானோர்  கலந்து கொண்டனர்.

.

Top