logo
சத்தியமங்கலம் தாளவாடி அருகே சாலையை  கடக்கும் யானை கூட்டம்.. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் தாளவாடி அருகே சாலையை கடக்கும் யானை கூட்டம்.. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

08/Jun/2021 06:20:33

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாளவாடி அருகே  யானை கூட்டம் சாலையை  கடக்கும்போது  வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென  வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக தாளவாடி தலமலை சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது மேலும் கோடை வெயில் காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது சாலையைக் கடப்பதும் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில் யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் சாலையோரம் நின்று தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையைக் கடக்கும் என்றும் குட்டிகளுடன் இருக்கும் காட்டுயானைகள் ஆக்ரோஷத்தோடு மனிதர்களை தாக்க வாய்ப்பு உள்ளது.

எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி புகைப் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் தங்கள் வாகனங்களை இயக்குமாறும்  வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Top