05/Jun/2021 10:36:12
ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரத்தில் ஏழு பேருக்கு கொரோனா
தொற்று உறுதியானதால், அப்பகுதியில் உள்ள, 100க்கும்
மேற்பட்ட வீடுகளை தனிமைப்படுத்தினர். அங்குள்ளவர்கள் வெளியே செல்ல முடியாலும், வெளி நபர்கள் உள்ளே
செல்ல முடியாமல் இரு வழிகளில் கட்டை
கட்டி அடைக்கப்பட்டது.
தனிமைப்பகுதியானதால், அங்கு பால், கீரை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்க யாரும் வருவதில்லை. இங்குள்ளவர்கள் மருந்து வாங்கக்கூட வெளியே செல்ல முடியவில்லை.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய, மாநகராட்சி ஊழியர்களிடம் கோரியும், தீர்வு கிட்டவில்லை. இதனால் கடந்த, 2 நாள்களாக அப்பகுதி மக்கள் தடுப்பு கட்டை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், வருவாய் துறையினர் இணைந்து, அவர்களுக்கு காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகன விற்பனைக்கு ஏற்பாடு செய்தனர்.
சனிக்கிழமை காலை அங்கு சென்று வீட்டு வசதித்துறை அமைச்சர்
சு.முத்துசாமி, அங்குள்ள 110 வீடுகளுக்கும் தலா
5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை
பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.
தனிமை பகுதியாக பிரித்து, கட்டைகள் கட்டும்போதே, அங்குள்ளவர்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.