logo
ஈரோட்டில்  ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல்-   ரூ.4.10 லட்சம் அபராதம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல்- ரூ.4.10 லட்சம் அபராதம்

05/Jun/2021 10:28:28

ஈரோடு, ஜூன்:ஈரோடு மாவட்டத்தில்   ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு   ரூ.4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கின் 12-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 275 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 875 இருசக்கரவாகனங்களும்நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மட்டும் ரூ.4.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சோதனை சாவடிகளில் - பதிவு இன்றி வரும் வாகனங்களை  மாவட்டத்திற்குள் போலீசார் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

Top