logo
சத்தியமங்கலம்- தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை.

சத்தியமங்கலம்- தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை.

20/Dec/2020 07:24:38

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில்  காளையா என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில்  மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.

 இதனை தடுக்கும் வகையில் யானை காட்டுப்பன்றி ஆகிய வன விலங்குகளிடம் இருந்து தான் பயிரிட்ட பயிர்களை காப்பாற்றிக்கொள்ள காளையா தனது விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அவர் அமைத்திருந்த  மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்டதில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் உயரழுத்த மின்சாரத்தை சட்டவிரோதமாக கம்பி வேலிக்கு அளித்ததன் காரணமாகத்தான் யானை உயிரிழந்ததாக தெரியவந்தது. இறந்த யானைக்கு 8 வயது இருக்கும் எனவும் 

இந்த சம்பவம் குறித்து விவசாயி காளையா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Top