logo

ஆலங்குடி அருகே மனைவியை காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார்

05/Jun/2021 04:35:57

புதுக்கோட்டை, ஜூன்: ஆலங்குடி அருகே தனது மனைவியைக் காணவில்லை  என்று கணவர் அளித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மூக்கம்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மகன் வெள்ளைச்சாமி(33). இவரது மனைவி பரமேஸ்வரி( 21). இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த மே  31-ஆம் தேதி வீட்டிலிருந்த பரமேஸ்வரி திடீரென  காணாமல் போகியுள்ளார். இதனைத்தொடர்ந்து, வெள்ளைச்சாமி, பல இடங்களில் பரமேஸ்வரியை தேடி அலைந்து  விசாரித்து வந்தார்

ஆனால்மனைவி பரமேஸ்வரி கிடைக்காததால்  செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்இதுகுறித்து, செம்பட்டிவிடுதி காவல் உதவி ஆய்வாளர் திருஞானம் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.

Top