logo
ஈரோடு மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  அமைச்சர் முத்துசாமியிடம் ரூ.3 லட்சம்  நிதி வழங்கல்

ஈரோடு மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அமைச்சர் முத்துசாமியிடம் ரூ.3 லட்சம் நிதி வழங்கல்

04/Jun/2021 02:16:13

ஈரோடு, ஜூன்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்களிடம் திரட்டப்பட்ட ரூ.3 லட்சம் நிதி  வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமியிடம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கட்டடம் கட்டும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி ரூ. 2.50 லட்சத்தை அம்மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் கட்டும் திட்டத்தில், ஆக்சிஜன் இணைப்புக்கான பைப்லைன் அமைக்கும் பணிக்கும்,மேலும் ரூ. 50,000 -  முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியத்துக்கும்  வழங்கினார்.

இந்நிகழ்வில், கல்லுாரி முதல்வர் டாக்டர் மணி, கூட்டணி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், பெருந்துறை வட்டார செயலாளர் மலையப்பசாமி, மொடக்குறிச்சி வட்டார செயலாளர் வரதராஜன், ஈரோடு வட்டார செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top