logo
2-வது திருமணம் செய்துகொண்ட கணவன் மீது பெண் புகார்: 9 பேர் மீது வழக்கு.

2-வது திருமணம் செய்துகொண்ட கணவன் மீது பெண் புகார்: 9 பேர் மீது வழக்கு.

03/Jun/2021 07:14:34

 புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவன், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் அளித்த புகாரைத்தொடர்ந்து 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகேயுள்ள  பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் வினோதினி (28). இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் பிரபு (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து, இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால், பிரபு, வினோதினியை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், பிரபு சில மாதங்களுக்கு  முன்பு மேற்பனைக்காடு அருகேயுள்ள சொர்ணக்காட்டைச் சேர்ந்த அமிர்தா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து, வினோதினி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, பிரபு, பிரபுவின் தந்தை ரெங்கசாமி, தாயார் சரசு, சொர்ணக்காட்டைச் சேர்ந்த அமிர்தா, அவரது தாயார் புஷ்பவள்ளிதுலுக்கவிடுதியைச் சேர்ந்த விஜயலெட்சுமி, மணக்கொல்லையைச் சேர்ந்த வித்யா, அழகுராஜா, வெட்டன்விடுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top