02/Jun/2021 10:30:10
சென்னை, ஜூன்: டவ் தே புயலில் காணாமல் போன நாகபட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்: கடந்த 13.5.2021
அன்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்
டவ் தே புயல் குறித்து வெளியிட்ட
எச்சரிக்கையினை தொடர்ந்து
தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. இருப்பினும், கீழ்கண்ட 2 நிகழ்வுகளில் 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாக தகவல் பெறப்பட்டது.
1) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த படகு, இலட்சத்தீவிற்கு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலுள்ள
ஒன்பது மீனவர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. காணாமல் போன 9 மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வரால் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மீட்புப்பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் விக்ரம் மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும், இலட்சத்தீவு நிர்வாகியின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களை தேடுதல் பணியில்
பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடலில் மூழ்கிய முருகன் துணை பெயர் கொண்ட .மணிகண்டன் என்பவரது மீன்பிடி படகுடன் ஒன்றாக சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இதர 2 மீன்பிடிவிசைப்படகுகளில் சென்ற 23 மீனவர்களும் காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடித்திட இயலவில்லை.
2) கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த திரு.சபிஷ், என்பவருக்கு சொந்தமான அமீர்ஷா என்ற பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு கடந்த 5.5.2021 -அன்று 16 மீனவர்களுடன் கேரள மாநிலம் பைபோர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து
மீன்பிடிக்கச் சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை
சேர்ந்தவர்கள் எனவும் டவ் தே புயல் கடந்த பின்பு அவர்கள் காணாமல்
போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. முன்னதாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.
காணாமல் போன 21 மீனவர்களை தீவிரமாக
தேடிக் கண்டுபிடித்து மீட்கக் கோரி இச்சம்பவம் தொடர்பாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம்
முதல்வர் கேட்டுக்கொண்டார்.
டவ் தே புயல் காரணமாக காணாமல்
போன நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும்,
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் (மொத்தம்
21 மீனவர்களும்) மீன்பிடி தொழிலையே வாழ்வாதார மாக
கொண்டவர்கள் என்பதாலும் காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் கப்பல் மூலம் 15.5.2021 முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும்
21 மீனவர்களையும் கண்டுபிடித்திட
இயலாத நிலை உள்ளது.
எனவே டவ் தே புயல் காரணமாக காணாமல் போன
21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினை கருத்தில்
கொண்டு மேற்கண்ட காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரணத் தொகையாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.