02/Jun/2021 08:01:36
புதுக்கோட்டை, ஜூன்: விராலிமலை தொகுதிக்குள்பட்டஇலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்களை முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏ-வுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் ஆகிய இடங்களில் உள்ளமருத்துவமனைகளுக்குச்சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்து உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கூடுதல் முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் நான் எடுத்துக் கூறிய படி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளனர். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
சென்னையில் கருப்பு பூஜை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.அதேபோன்று மண்டல அளவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்றார் விஜயபாஸ்கர்.