02/Jun/2021 06:28:59
புதுக்கோட்டை, ஜூன்: நடிகர் தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பில் விராலிமலை தொகுதியில் முன்களப்பணியாளர்கள், காவலர்கள், ஏழைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தளபதி விஜய் ஆணைக்கிணங்க விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ- புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத் தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை ஜெ.பர்வேஸ் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை விராலிமலை ஒன்றியத்தலைவர் மாத்தூர் விஜி தலைமையில் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கொரோனாவால் மக்களின் நலனுக்காக வேகாத
வெயிலில் இரவும் பகலுமாக பாடுபடும் காவல்துறையினருக்கு
உதவும்
வகையில்
மாத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் மதிய
உணவாக சிக்கன் பிரியாணி வழங்கினர்.
மேலும், மாத்தூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருள் களான அரிசி காய்கறிகள் வழங்கியும் மாத்தூர் சுற்று வட்டாரத்தில் உணவின்றி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கியும் மற்றும் முக்கிய இடங்களில் கப சூர குடிநீர் மக்களுக்கு வழங்கினர்.