logo
தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி: எம்எல்ஏ- கே.ஏ.செங்கோட்டையன் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி: எம்எல்ஏ- கே.ஏ.செங்கோட்டையன் வழங்கல்

31/May/2021 04:47:23

ஈரோடு  மே: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே  தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,காய்கறிகளை அத்தொகுதி  எம்எல்ஏ- கே..செங்கோட்டையன் வழங்கினார்.

கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனோ ஊரடங்கையொட்டி அரிசி மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சிமன்ற தலைவர் சத்தியபாமா வேலுமணி தலைமையில்  நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்.எல்..வுமான கே..செங்கோட்டையன் கலந்து கொண்டு  16 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, ஆவிபிடிக்கும் கருவி, மாத்திரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வெள்ளாளப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங் களையும் வழங்கினார். இதை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். மேலும் சுகாதார நிலையத்தில் உள்ள உள்நோயாளிகள் படுக்கை வசதிகளையும் எம்.எல்.  பார்வையிட்டர்.

இந்த நிகழ்ச்சியில் கோபி ஒன்றியக்குழு தலைவர் மவுதீஸ்வரன், ஊராட்சி செயலளர் நாகமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top