28/May/2021 04:18:09
புதுக்கோட்டை, மே: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை கபசூர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட காமராஜபுரம், காந்திநகர், மியூசியம், கோவில்பட்டி,
அடப்பன்வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது..
இந்நிகழ்வை கட்சியின் மாவட்டச் செயலாளர்
எஸ்.கவிவர்மன் தொடங்கி வைத்தார். மாவட்ட
செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், வாலிபர்
சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரச் செயலாளர் எஸ்.பாபு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், சிஐடியு சார்பில்
ரெத்தினவேல் மற்றும் எஸ்.விக்கி, டேவிட்,
பாண்டியன், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.