26/May/2021 09:46:27
புதுக்கோட்டை, மே: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்திட அனுமதிக்கப்பட்டுள்ள 6 தனியார் மருத்துவமனைகளில் புதுக்கோட்டை புதுகை ஸ்டார் மருத்துவமனை, முத்துமீனாட்சி மருத்துவமனை, பொன்னமராவதி ஸ்ரீதுர்க்
கா மருத்துவமனை, மணமேல்குடி ஸ்ரீ விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளுக்கு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனைகளில்
இத்திட்டத்தின் கீழ்
இதுவரை 13 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்பொழுது புதுகை ஸ்டார் மருத்துவமனையில்
ஓரு நோயாளியும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் 5 நோயாளிகளும், பொன்னமராவதி ஸ்ரீதுர்க்கா மருத்துவமனையில்
6 நோயாளிகளும் இத்திட்டத்தின்கீழ்
சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட திட்டத்தினை
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.