logo
முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கோவிட் சிகிச்சை அளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கோவிட் சிகிச்சை அளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

26/May/2021 09:46:27

புதுக்கோட்டை, மே: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதிக்கப்பட்டுள்ள  6 தனியார் மருத்துவமனைகளில் புதுக்கோட்டை புதுகை ஸ்டார் மருத்துவமனை, முத்துமீனாட்சி மருத்துவமனை, பொன்னமராவதி ஸ்ரீதுர்க் கா மருத்துவமனை, மணமேல்குடி ஸ்ரீ விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளுக்கு முதலமைச்சரின்  விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்தற்பொழுது புதுகை ஸ்டார் மருத்துவமனையில் ஓரு நோயாளியும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் 5 நோயாளிகளும், பொன்னமராவதி ஸ்ரீதுர்க்கா மருத்துவமனையில் 6 நோயாளிகளும் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Top