21/May/2021 06:51:23
ஈரோடு, மே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ஆவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா பங்கேற்று ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள்
ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாச்சலம், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர்
,திருச்செல்வம், மாவட்ட
பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், வின்சென்ட், அரவிந்த்
ராஜ், சித்திக், கராத்தேயூசப், நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, எஸ் டி பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி.,
சிறுபான்மை பிரிவு மண்டல தலைவர் மொகபூப் பாட்சா, சிறுபான்மை துணைத்தலைவர் கே.என்.பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் மக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது.
இதைப்போல் கருங்கல்பாளையம் உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கும் கபசுரக் குடிநீர், முக
கவசம் வழங்கப்பட்டது. ஆனூர் தியேட்டர் அருகே
செவிலியர்களுக்கும் சுகாதார
பணியாளர் களுக்கும் பாதுகாப்பு உடைகள், குழந்தைகளுக்கு
பவுடர்கள் வழங்கப்பட்டன. இதையொட்டி அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.