logo
 கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் உயிருக்கு ஆபத்து:எஸ்.பி.அலுவலகத்தில் இளம் பெண் புகார்

கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் உயிருக்கு ஆபத்து:எஸ்.பி.அலுவலகத்தில் இளம் பெண் புகார்

29/Dec/2020 10:11:52

ஈரோடு, டிச:அந்தியூர் அடுத்த அத்தாணி கருவல்வாடிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கமலா (26) என்பவர் ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்து எஸ்.பி. தங்கதுரையை  நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் பெயர் ஆறுமுகம்.  டெம்போ ஆட்டோ வைத்துள்ளார். சம்பவத்தன்று அத்தாணியில் உள்ள பவானி பிரிவு ரோட்டில் எனது கணவர்  டெம்போ ஆட்டோவை நிறுத்திவிட்டு அவர்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அத்தாணி பகுதியைச் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர் அவரது கூட்டாளிகளுடன் வந்து எனது கணவரை அடித்து உதைத்து கந்து வட்டிக்கு வாங்கிய பணம் திருப்பித் தர முடியவில்லை உனக்கு எதுக்கு ஆட்டோ என்று கூறி எனது கணவரின் ஆட்டோவை எடுத்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து எனது கணவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் குறித்து  ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தேன்.

  ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கந்துவட்டி கும்பலை சேர்ந்த சிலர் என்னை போனில் தொடர்பு கொண்டு வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர். 

இதனால் எனக்கும் எனது கணவர் மற்றும் எனது  குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து எனது கணவரின் ஆட்டோவை மீட்டு எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  அதில் கூறியுள்ளார். 


Top