17/May/2021 10:21:51
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ.2000 வழங்கும் திட்டத்தினை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட கீரனூர், குண்டான்றார்கோவில், கந்தர்வகோட்டை, அம்புக்கோவில், கறம்பக்குடி ஆகிய இடங்கில் முதலமைச்சரின் நிவாரண நிதி முதல்தனையாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிதி வழங்கும் திட்டத்தினை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ஓ.எஸ்.மணியம், மா.தமிழய்யா, பரமசிவம், முத்துகிருஷ்ணன், நகரச் செயலாளர்கள் அண்ணாதுரை, முருகேசன்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ஏ.ராமையன், த.அன்பழகன், ஒன்றியச்
செயலாளர்கள் கே.தங்கவேல், வி.ரெத்தினவேல், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்
ஞானசேகரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர்
துரை.நாராயணன், சிபிஐ ஒன்றியச் செயலாளர்
உ.அரசப்பன் மற்றும் தொடர்புடைய அரசு
அலுவலர்கள் பங்கேற்றனர்.