16/May/2021 09:24:40
சென்னை, மே: கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.5.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த
ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்க லாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.
திமுக சார்பில் மருத்துவர் நா.எழிலன், அஇஅதிமுக சார்பில் மருத்துவர் சி. விஜயபாஸ்கர், இ.காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம், பாட்டாளிமக்கள்கட்சி சார்பில் ஜி.கே. மணி, பாரதியஜனதாகட்சி சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார், விடுதலைசிறுத்தைகள் சார்பில் எஸ்.எஸ். பாலாஜி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி. ராமசந்திரன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் ஜவாஉறிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரி மை கட்சி சார்பில் தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகிய 13 எம்எல்ஏ-க்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.